எதுவுமே ஆரம்பம்தான்
முடிவில்லா பாதையில்
முதல் அடிக்கான ஆர்வம் மட்டுமே
நிஜம்
பின் வருபவை யாரையும் தொடர விடுவதில்லை
புது அறிமுகங்களின் முடிவில் மிச்சம்
இருப்பவை வேற்று முகங்களே
எனக்கான முகம்
அடுத்த அறிமுகங்களின் தேடலில்
நீயா அவனா எவனோ எனும்
கேள்வியினை பற்றிக்கொண்டு
புது பாதை தேடுகிறேன்
புது பயணம் நோக்கி
வருபவன் யாராகவும்
இருந்துவிட்டு போகட்டுமே
என் தாகம் தீரும் வரையிலான
பொழுது வரை!
2 comments:
தாகம் ஒன்றுதானே வாழ்வின் எல்லை இல்லாத புதிய பயணங்களை தருகிறது. வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் எழுதுகிறாய். மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்.
Happa....! Evlo periya gap ku apram rentry.!
எவ்ளோ நாள் கழிச்சி வர்றீங்க.! அதுக்கே ஒரு வாழ்த்துக்கள்.
//புது அறிமுகங்களின் முடிவில் மிச்சம்
இருப்பவை வேற்று முகங்களே//
இந்த வரி ரொம்ப பிடிச்சிருந்தது. பிடித்தமான சில முகங்கள் சட்டுன்னு வந்து சட்டுன்னு மறைஞ்சி போயிடுவாங்க..!
ஆனா அவங்களோட நியாபகங்கள் நம்மளுக்கு நெறைய பாதிப்ப்புகளை கொடுத்திருக்கும்..!
Post a Comment