Wednesday, March 4, 2015

தாகம் தீரும் பொழுது


எதுவுமே ஆரம்பம்தான்
முடிவில்லா பாதையில் 
முதல் அடிக்கான ஆர்வம் மட்டுமே 
நிஜம் 
பின் வருபவை யாரையும் தொடர விடுவதில்லை 

புது அறிமுகங்களின் முடிவில் மிச்சம் 
இருப்பவை வேற்று முகங்களே 
 எனக்கான முகம் 
அடுத்த அறிமுகங்களின் தேடலில் 

நீயா அவனா எவனோ எனும் 
கேள்வியினை பற்றிக்கொண்டு 
புது பாதை தேடுகிறேன் 
புது பயணம் நோக்கி 

வருபவன் யாராகவும் 
இருந்துவிட்டு போகட்டுமே 
என் தாகம் தீரும் வரையிலான 
பொழுது வரை! 

2 comments:

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

தாகம் ஒன்றுதானே வாழ்வின் எல்லை இல்லாத புதிய பயணங்களை தருகிறது. வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் எழுதுகிறாய். மேலும் மேலும் எதிர்பார்க்கிறோம்.

லெமூரியன்... said...

Happa....! Evlo periya gap ku apram rentry.!
எவ்ளோ நாள் கழிச்சி வர்றீங்க.! அதுக்கே ஒரு வாழ்த்துக்கள்.


//புது அறிமுகங்களின் முடிவில் மிச்சம்

இருப்பவை வேற்று முகங்களே//

இந்த வரி ரொம்ப பிடிச்சிருந்தது. பிடித்தமான சில முகங்கள் சட்டுன்னு வந்து சட்டுன்னு மறைஞ்சி போயிடுவாங்க..!

ஆனா அவங்களோட நியாபகங்கள் நம்மளுக்கு நெறைய பாதிப்ப்புகளை கொடுத்திருக்கும்..!