அதிகாலையின் கனவொன்றில்
மெல்ல சொன்னாய்
என்னின் மீதான உன் கனவினை
விழித்த பின்னும் சுவை மாறவில்லை
அந்த மாய ஊஞ்சலில் இருந்து
இறங்க முயற்சிக்கவில்லை நான்
ஆடிக்கொண்டே உள்ளேன்
கீழும் மேலுமாய்
கனவுக்கு வண்ணம் திரட்டி தருகிறாய்
சிகப்பு கை கொண்டு
கன்னம் தொடுகிறாய்
அதிகாலையின் மஞ்சளாய்
நிறைந்து போகிறேன்
கண்ணுக்குள் நிறைகிறாய்
கண்மூடி உன்னை ஏந்திக்கொள்கிறேன்
என் பசுமையின் ஈரம் சிந்திவிடாமல்
என்னை ஏற்றுக்கொள்கிறாய்
நீள நீலத்தினுள் அமிழ்ந்து போய்விடுகிறோம்
கருப்பாய் வெண்மையாய்
யாவுமாய்
சூழும் புகையுனுள்
நடந்து கரைகிறோம்
தோழனே!!!