Tuesday, September 29, 2009

காற்றாய் கலந்தவன்


Sunday, September 13, 2009

கனவுகளின் காதலி

கனவுகளை சுவாசிப்பவள் நான்

கனவுகளின் வாசத்தில் வாழ்பவள் நான்
கரைந்து போன காற்றின் ஒலி ஒன்று
தானாய் சுமந்து போனது
என் கேவலை

வழியும் கண்ணீரின்
வற்றிப்போன நொடியொன்றில்
கனவொன்று கண்டேன்

கருப்பு பிரபஞ்சத்தின்
வெளியில்
கை நீட்டி வரம் கேட்டேன்
ஒற்றை சுடு நீர்
விரல் வழியே வழிந்தோடியது

சூழ்ந்த இருளின் நடுவே
திருவிழா ராட்டினமாய்
உன் நினைவுகள் வேகமாய்
சுற்றுகின்றன

நினைவு மரித்துப்போன
பிணம் ஒன்று
எரியும் சிதையின் மேல்
நர்த்தனமாய்

ஒவ்வொரு விடியலிலும்
உன் விரல் தீண்டும் நொடியில்
எனக்குள்
இந்த கனவு