Friday, March 6, 2015

வேராய் மாறும் நான்



உன் நினைவுகளின் அடுக்குகளில் நான் 
தங்கி இருப்பேனா என்று என்னுள் 
கேள்வி இல்லை 

நீ தங்கி தூங்கி போன 
என் படுக்கையின் ஓரங்களில் 
இன்னும் மிச்சம் இருக்கிறது 
உன் ஆழ முத்தங்கள் 

தனிமை என்னை அச்சுறுத்திய 
கால கட்டங்களில் அறிமுகமானவன் நீ 
இரவுகளின் சத்தங்கள் என்னை 
நடுங்க வைத்துக்கொண்டிருந்த  காலம் அது 

தைரிய போர்வை போர்த்திய 
என் தூக்கங்களில் எப்போதுமே ஈரம் 
நிறைந்திருந்திருக்கின்றது 

உன் அறிமுகம் என் தயக்கம் 
நம் பயணங்கள் 

கட்டி அணைத்து இறுக்க தோன்றிய 
உன் வியர்வை வாசம் 

அணைக்க வைத்த 
உன் ஆண்மை 

உள்ளங்கையில் தேங்கிய நீராய் 
வழிந்து எங்கே போனாய் 
நண்பனே 

நீளும் விரல்களை 
பற்றிட விழையும் போதெல்லாம் 
என் கனவுகள் எனக்கு முன்னே 
விழித்து விடுகின்றன 

போய் வா எங்கேனும் 

நீருள் வேராய் படர்ந்து 
காத்திருக்கிறேன் 
கடந்து போன நம் நிமிடங்களை 
பற்றிய படி 




No comments: