Wednesday, April 29, 2009

காலங்கள் கடந்த பின் வரும்
ஒவ்வொரு அழைப்பிலும்
குத்தும் வலியாலான கரம் நீள்கிறது.

அதன் காரணம் புரியாத
மூளை அடுக்குகள் தனியே அலைகின்றன.

கரம் பற்றி நடந்த நாட்கள்
விரல் வழியே வழிகின்றது.

எண்கள் சில நேரங்களில்
எண்ணங்களின் கலவரத்துக்கு
காரணமாய் ஆகிவிடுகின்றன.

எண்ணங்களின் பின்னே போகும்
வாழ்வின் பதில்கள்
கேள்வி தேடி தன் போக்கில்

கட்டிலோடு கரைந்த உறவுகள்
தன் விதை தேடி புதிதாய்
உறவுப்பாலம் அமைக்க முன் நிற்கின்றன

முடிவு தேடித்தானே பயணம்
பின் எதற்கு கவிதையின் முடிவு