Thursday, June 4, 2009

மழை நிறம்

நேற்றுதான் அந்த ஓவியம்
வரையத்தொடங்கினேன் இரவின் ஒளியில்

ஒவ்வொரு கோட்டின் முடிவிலும்
ஏதோ ஒரு கேள்வி
எனைப் பார்த்து கண் குத்தி நின்றது

ஒரு மாலை நேரத்து
உயிரின் உள் நனைத்த
ஒரு சாரலை கோட்டில் வரைந்துவிட நினைத்தேன்

மழையின் வண்ணம் வரைய
என்னுள் மிச்சமிருந்த
கடைசி சந்தோஷம் வழித்தெடுத்தேன்

தொடங்கிய நிமிடம் முதல்
என் விரல் வழியே
உதிரத்தொடங்கிய என் குருதி
இந்த நிமிடம் வரை தொடர்கிறது

இறுதியில் என் மழையின் நிறம்
சிவப்பாகிப்போனது
எனது விரல் அறியாமலே.....