எப்போதடா உள் நுழைந்தாய்
விலகிப் போகும் மேகங்கள்
எட்டி நின்று பார்த்துவிட்டு
போய்க்கொண்டிருந்த காலம் அது
தொட்டு விடும் மழைத்துளிகள்
அனலாய் என்னை எரித்துக்கொண்டிருந்த
பகல் பொழுதுகள் அவை!
மெதுவாய் மெதுமெதுவாய்
உருமாறும் கனலொன்றாய்
வந்தாய்
கனவுகள் தந்தாய்
கைபிடித்து நடந்தாய்
தோள் தழுவி அணைத்தாய்
நட்பை விரலிடுக்குகளில்
வடிய விட்டாய்
இரவுகளின் ராட்சசனை
அழித்த ரட்சகனானாய்
ஜன்னல் கம்பிகளினூடே
வந்து போன ஒரு பருத்தி பூவாய் நினைத்தேன்
பட்டாம்பூச்சியாய் என் மேடை
அமர்ந்து கண் பார்த்தாய்
மடிக்கணினியில் உள் நுழைந்தாய்
தொலைபேசியின் திரையினுள் விரிந்தாய்
நாட்கள் நிறைத்தாய்
நீளும் காதலின்
வாழ்வானாய் நீ!!!
தோழனே!!!
No comments:
Post a Comment