Tuesday, January 8, 2008

மழுங்கடிக்கப்பட்ட என் தேவதை

அணைக்க நீளும் கைகள்
வெட்டப்பட்டிருக்கின்றன.
கனிவு பொழியும் கண்கள்
குருடாக்கப்பட்டிருக்கின்றன.
என் தோட்டம் அளக்கும்
கால் விரல்களின் நகங்கள்
பிடுங்கப்பட்டிருக்கின்றன.

சபிக்கப்பட்ட
என் தேவதையின் தலையும்
என் தேவனின் ஆண்மையும்
மழுங்க வழிக்கப்பட்டிருக்கின்றன

சாணை பிடிக்கப்படாத
ஒரே கத்தியினால்....

1 comment:

N Suresh said...

சாணை பிடிக்காத
கத்தி கதநாயனாகும் கவிதை