Thursday, January 17, 2008

பயணத்தின் ஊடே

முகம் தெரியா தூரத்திலும்
உள்ளம் உணரும் உணர்வுகள்
அனைத்தையும் சொல்லிவிட முடியா தவிப்புடன்
நகரும் ரயில் பயணமாய் வாழ்க்கை...

ஒவ்வொரு திருப்ப‌த்திலும்
ஜ‌ன்ன‌லோர‌மாய் தெரியும்

விழிக‌ள் தோறும் க‌ன‌வுக‌ள்
நீளும் தண்டவாளத்தில் தொலைக்கப்பட்ட‌உறவுகள்...

விடியும் காலை எனக்கானதான நம்பிக்கை

என் விரல் தேடி கோர்க்கும்
நட்பின் கரங்கள்...
கனவின் விழிப்பில் தினமும் நிகழும்
சந்திப்பின் பிம்பங்கள்...

பிம்பங்கள் கலையும் நிமிடங்கள்

அடுத்த ரயிலின் துவக்கம்.....

2 comments:

N Suresh said...

இரயில் பயணம் முடித்த உணர்வில்
வாழ்த்துகிறேன். நல்ல கவிதை

என் சுரேஷ்

Hari Navaneethan said...

Amazing lines!!! simply superb