Friday, January 18, 2008

சொல்லியிருக்கலாமோ

எல்லாம் நன்றாகத்தான் இருந்தது

உனது நினைவாக நானும்
எனது செயலாக நீயும்
பயணித்தபோதும்

கைகோர்க்காமல் விலகி
மனம் கோர்த்து
நடைபயின்றபோதும்

இமை தட்டிய உறக்கம்
வேடிக்கை பார்த்தபடி
பேசிச் சலித்தபோதும்

எல்லாம் நன்றாகத்தான் இருந்தது

உதடு வரை வந்து
உள் சென்ற‌
உனக்கான என் வார்த்தை
குரல்வளை நெரிக்கும் வரை

3 comments:

N Suresh said...

சொல்லியிருந்திருக்கலாமே என்று தலையிலடித்து சொல்லியிருக்கலாமோ என்று பிறகு நான் சொல்லாமலிருக்க இந்த பின்னூட்டம், நல்ல கவிதை அனுராதா! வாழ்த்துக்கள்

பாசமுடன்
என் சுரேஷ்

N Suresh said...

Word Verification option may taken out, please.

n suresh

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

"உதடு வரை வந்து
உள் சென்ற‌
உனக்கான என் வார்த்தை
குரல்வளை நெரிக்கும் வரை"

this 4 lines enough to tell whole poem. excellen lines!