Friday, January 15, 2010

பிய்ந்து தொங்கும் என் பொம்மை




















அமைதியாய் கழிந்து கொண்டிருக்கிறது
தனிமையின் பொழுதுகள்

விரல் நகங்கள் பூசப்பட்ட சாயத்தின்
சுவடுகளை இழந்து கொண்டிருக்கிறது

நிழல்கள் நிஜங்களாய் எதிரில்
நடனமாடிக்கொண்டிருக்கிறது

மனவறையில் இறுக்கிப் பூட்டப்பட்ட
நினைவுகள் எழும்பிக்கொண்டிருக்கிறது
தளும்பும் காயங்களின் தழும்புகளோடு

துரத்துவதைத் திரும்பிப் பார்க்காமல்
விரைந்து கொண்டிருந்திருக்கிறேன்

புதுப் புது வலிகள்
படிப்பித்திருக்கப் பட்டிருக்கிறது
கட்டாயமாய் 

நான் கேட்காமலே
எனை ஆட்கொண்டிருக்கிறது

ஒரு சோம்பலான மதிய வேளையில்
உனைத் தேடி உன் அறைக்கு
வந்திருந்தேன் வீட்டிற்குத்  தெரியாமல்

நீ இல்லா உன் அறையின்
வெறுமை தாங்காமல் வெளியேறினேன்

வழி காட்டுவதாய்த்தானே சொன்னார்கள்
பின் ஏன் அந்த
இருட்டுக் குடிசையில்
தள்ளினார்கள்

வலிக்கிறது
என் உடல் முழுதும்
உருவம் அருவமாய் படர்ந்திருக்கிறது
ஏதோ ஒன்று

வலி சொன்னாலும் மரத்துப் போன
செவிகள் மடல் வைத்து
மூடிக் கொண்டிருந்திருக்கிறது

கைகள் மட்டும் தங்கள் வேலையை
இயல்பாய் தொடர்ந்திருக்கிறது

ஒரு கை
இல்லாத என் முலை
தேடி அழுத்திவிட்டு
கொண்டிருந்திருக்கிறது

இன்னொரு கை
உறுதியாய் நின்ற 
தன் எழுச்சியை தடவிக்கொண்டபடி
பெருமையுடன்

பிரியாத இடம் பிரித்து
உள் நுழைய எத்தனிக்கும் ஒருவன்

பிரிந்த உதடு வழியே
உயிர் உறிஞ்சியவாறே  ஒருவன்

கடந்த பாதை சுவட்டின் சூடு
ஆறும்முன் மீண்டும் மீண்டும்
காதில் கேட்கிறது
அலறல் சத்தம் மட்டும்

இரவுகளில் தனி ஆவர்த்தனம் ஆடுகிறது
விரல்கள் உடல் வழியே
இன்னும் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு

இன்றும்
அமைதியைத் தான் கழிந்து கொண்டிருக்கிறது
தனிமையின் பொழுதுகள்

 -  இது உண்மையிலேயே உண்மையாய் நடந்த ஒரு சம்பவம்.