Wednesday, January 2, 2008

நாமும் அவனும்

சபிக்கப்பட்ட பழங்களின் மர நிழலில்
கால் நீட்டி அமர்ந்திருந்தோம்
ஒருவரையொருவர் அணைத்தபடி
வெற்று உடலாய்
மௌனமாய்
நமைப் பற்றி ஏதும் அறியாமல்
எந்த கேள்வியும் எழாமல்

தூர நின்று பார்த்த ஆதாம்
வேகமாய் அருகில் வந்தான்..
தன் ஆண்மையை நம்முள் பதிவு செய்வதற்காய்

அவன் குறி
நேற்றுப் பிறந்ததைப் போல சுருங்கிப் போனது
நம்மின் வெப்ப மூச்சில்....

3 comments:

arun said...

nicely expressed the reason for lesbianism.

N Suresh said...

ஒரு வித்தியாசமான சிந்தனையிது
அருணாவின் பின்னூட்டத்தின்
ஒற்றை வரியால்
அணைத்து முத்தமிடுகிறதே!

Shanmugampillai Jayapalan ஜெயபாலன் V.I.S.Jayapalan said...

இதுவரை வாசித்ததில் உங்களுடைய கவிமனசின் சமரசம் செய்யாத மிகச் சிறந்த படைப்பு இதுதான். பெண்ணின் கவிதை மொழி தன் பணியாத கிளற்ச்சியோடும் அழகோடும் முழையடகிறது. எல்லா தெரிவுமக்குமான பெண்ணின் சுதந்திரத்தில் சமரசம் என்கிற கேழ்வியில்லை. நல் வாழ்த்துக்கள் அனுராதா