Saturday, October 31, 2009

கேள்விகள்

ஒவ்வொரு நாளும் கேள்விகள்
நமைத் துரத்தும்

ஒரு கருப்பு நாளில்
தலை மேல் இறங்கும்

எங்கிருந்தோ கவ்விய
ஒற்றை மாமிசத்துண்டு ஒன்றை
அன்றுதான் அணிந்திருந்த
புதுச் சட்டையின் மேல்
அபிஷேகம் செய்யும்

ஒதுங்க இடமில்லா சாலையின்
நடுவில் போகையில்
நம் மேல் சேறடித்துப் போகும்
சில கேள்விகள்

தனிமையில் அமர்ந்திருக்கும்போது
காதோரம் ரீங்காரமிடும்
எங்கிருந்தோ பறந்து வரும்
கேள்விகள்

எடுத்துக் கொஞ்ச
எச்சில் உமிழ்ந்துவிட்டு போகும்
சில கேள்விகள்

 கலவியின் உச்சத்தில்
என்றோ பேருந்துப் பயணத்தில்
பார்த்துப் பெருமூச்சு விட்டவனின்
முகம் வந்து மறையும்

 சில முகங்கள் கேள்வியை மட்டுமே
நினைவில் நிறுத்தும்
எத்தனை சிரமப்பட்டாலும்

உதறி எழுந்து போய்விட முடியா
உறவுகளின் இறுக்கத்தின்
முடிவில் எஞ்சிருப்பது
கேள்விகளே

4 comments:

Cable சங்கர் said...

/ கலவியின் உச்சத்தில்
என்றோ பேருந்துப் பயணத்தில்
பார்த்துப் பெருமூச்சு விட்டவனின்
முகம் வந்து மறையும்//

நிதர்சனம்.

நேசமித்ரன் said...

//கலவியின் உச்சத்தில்
என்றோ பேருந்துப் பயணத்தில்
பார்த்துப் பெருமூச்சு விட்டவனின்
முகம் வந்து மறையும்//


அப்பாடி என்ன ஒரு வரி !!!!!

தொப்பியில் மேலும் ஒரு சிறகு

தோழி said...

Nandri Sankar, Nesamithran.

அன்பேசிவம் said...

கலவியின் உச்சத்தில்
என்றோ பேருந்துப் பயணத்தில்
பார்த்துப் பெருமூச்சு விட்டவனின்
முகம் வந்து மறையும்

சில முகங்கள் கேள்வியை மட்டுமே
நினைவில் நிறுத்தும்
எத்தனை சிரமப்பட்டாலும்

உதறி எழுந்து போய்விட முடியா
உறவுகளின் இறுக்கத்தின்
முடிவில் எஞ்சிருப்பது"

அனு, உங்களுடைய இடம் இதுவல்ல, இன்னும் தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் எழுத்தே உங்களை அங்கு கொண்டுபோய் சேர்க்கும். வாழ்த்துக்கள்.