Friday, October 23, 2009

அழைப்பு மணி

நேற்றுதான் முதல் முறையாக‌
ஒரு அழைப்பு மணியை வாங்கி வந்தேன்
என் வீட்டில் மாட்டி வைக்க‌
ஒரு அழகிய கிளியும்
இரு மணிகளும்
ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளுமாறு
அமைக்கப்பட்ட மணி அது



மிக நீண்ட நாள்
நெடுங்கனவு அது எனக்கு



ஒரு சதுர முற்றமும்
சிறிய‌ ச‌மைய‌ல‌றையும்
என‌க்கு ம‌ட்டுமேயான‌ ப‌டுக்கை அறையும்
நான்கு இலைக‌ள் ம‌ட்டும் செடியை கொண்ட‌
என் வீட்டிற்கான‌
அழைப்பு ம‌ணி அது



எங்கு அழைப்பு ச‌த்த‌ம் கேட்டாலும்
தானாக‌ திரும்பி பார்ப்ப‌து
இய‌ல்பாகி விட்ட‌
ஒரு நொடியின் முடிவில் தோன்றிய‌து
என் வீட்டுக்கும் தேவையான
ச‌த்த‌த்தின் ஒலி
குடிபோதையில் உன்னால்
த‌ட்டியும்
உதைத்தும்
உடைக்கப்பட்டுவிட்ட‌ க‌த‌வு
இனிமேல் என்னைப்போலவே அழாது
காய‌ங்க‌ளை சும‌ந்து



உன‌க்கான‌ ம‌ர‌ண‌ம்
கதவற்ற‌ வாச‌லில் கைக‌ட்டி வேடிக்கை
பார்த்துக்கொண்டிருக்கிற‌து
அத‌ற்கான‌ ஒலியை ப‌திவு செய்ய‌



அழைப்பு மணி ச‌த்த‌ம் கேட்ட‌தும்
க‌த‌றி அழ‌ ஒத்திகை
ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து
ச‌த்த‌மில்லாம‌ல்

4 comments:

நேசமித்ரன் said...

வலிக்கும் சொற்களின் நிதர்சனம்

Cable சங்கர் said...

எவ்வளவு நிஜம்.. அந்த கடைசி வரிகளில்..:(

Mohan R said...

GR8... That was AWESOME (Sorry tamila type pannura alavukku porumaiya irukka mudiyala)

தோழி said...

Thanks Nesamithran, Sankar, Ivann