Wednesday, October 21, 2009

உயிரணுச் சுவை

பல இரவுகளின் தேடல்
பெரும்பாலும் விடியலில் முடிந்துவிடுகிறது

எந்தத் தேடலும் இல்லாமல்
மறைந்து போன
ஒரு பெண்மையின் மெல்லிசை
என் போர்வைக்குள் மறைந்துள்ளது
ஒவ்வொரு இரவும்

வெந்து தணியும்
அடுக்களையின் சூட்டில்
அனைத்தையுமா அவித்து விட முடிகிறது

பரிமாறுதல் இல்லாப் பண்டமாய்
வெற்றுப் பிண்டமாய்
ஒவ்வொரு நாளும் சுவை
சேர்த்து வைத்துக் காத்திருக்கிறேன்

தவறும் ஒவ்வொரு நொடியும்
தவிப்பின் பேரமைதி யுகங்கள்

காத்திருத்தல்
பெருவெளியின் ஓரத்தில்
நிசப்தமாய் கண் சிமிட்டுகிறது

பதிந்து மறைந்து போன
நகக் குறிகள்
எதிரில் நின்று
நடந்து போன நிமிடங்களின்
பெயர்க்காரணம் சொல்கிறது

வழியும் உதட்டு ரத்தம்
நுனி நாக்கால் தடவிப் பார்க்க
உன் உயிரணுவின்
சுவையாய் உள் இறங்குகிறது

விரலழுத்தம் தாளா உடைகள்
தன்னால் வழிந்தோடி விடுகின்றன
கால்களின் நடுவே

கிழிக்கப்பட்ட தலையணைகள்
வாய் விட்டுச் சிரிக்கின்றன


மறுபடியும் விடிந்துவிடுகிறது
ஒவ்வொரு இரவும்

http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=2154

4 comments:

நேசமித்ரன் said...

:)
பெண்மையின் உணர்வுகள் மிக நுட்பமான மொழியில் பதிவு செய்யப் பெற்றிருக்கிறது
நண்பரே இந்தக் கவிதையில்

தமிழன்-கறுப்பி... said...

ம்ம்...

Mohan R said...

I can feel those lines :(

Cable சங்கர் said...

உங்கள் கவிதைகளில் ஒரு தேடலும், ஆழ்ந்த உணர்வு வெளிப்பாடுகளும் இருக்கிறது..