Friday, November 6, 2009

குறியீடுகள்

பாவத்தின் குறியீடுகள்
ஒவ்வொரு நாளும்
அகராதியின் புது அர்த்தம் சுமக்கும்

காதலின் வெளிப்பாடாய் மட்டுமே
விரிந்து சுருங்கும்
யோனி காமத்திலும்
பாவத்தின் எண்ணிக்கையில் முதலாவதாக
இருந்த போதும்

அளவுக்கு அதிகமான பசி
வயிற்றோடு மட்டும் நின்று விடுவதில்லை
நம்மில் பலருக்கு
எனினும் உண்டி சுருங்க வேண்டியது
கட்டாயமாக்கப்பட்டு விட்டது
என் தோழியருக்கு

பொறாமை பொதுவாய் மாற்றப்பட்டுவிட்டது
கலவிச் சுகம் பொதுவில்
இயக்கத்தின் எண்ணிக்கையின் அளவில்
பேசப்படுகையில்

சோம்பலில் மட்டுமே
விட்டுக் கொடுக்கிறான்
என் கனவுக் காதலனும் கூட
தன் ஆண்மையின் அதிகாரத்தை
சரிந்துப் படுத்து

அளவுக்கு மிஞ்சியக் காதலைக்
காட்டுவதைச் சொல்லி
என் ஆசைக் கூட்டின்
ஒவ்வொரு சிறகையும்
பிய்த்துப் போடுகிறாய்
இதழோரம் நகைக் கூட்டியபடியே
அளவுக்கு மீறினால்
அதுவும் பாவக் கணக்குகளின் எண்ணிக்கையை
அதிகரிக்குமாம்

இரவில் வந்து வேகமாய்க்
கூடி
உடன் மறைந்து போகும்
உனக்கெங்கே புரியப் போகிறது
உனக்காய் நான் சேர்த்து வைக்கும்
என் பரிசுகள்

வெறுப்புக் கொப்பளித்துத்
தலைக்கேறும் நரம்புகளின் வழியே

பாவத்தின் எண்ணிக்கையில்
கூடுதல் குறைதல் இருக்கலாம்
ஆனால் குறியீடுகள் சுமந்து
உண்டான தழும்புகள்

7 comments:

Cable சங்கர் said...

//காதலின் வெளிப்பாடாய் மட்டுமே
விரிந்து சுருங்கும்
யோனி காமத்திலும்
பாவத்தின் எண்ணிக்கையில் முதலாவதாக
இருந்த போதும்//

நிஜம்.

அன்பேசிவம் said...

ஊப்ப்ஸ்... என்னங்க இதெல்லாம். எனக்கு புரிந்துகொள்ளவே நேரம் பிடிக்கிறதே, எப்படி எழுதுகிறீர்கள்.

நேசமித்ரன் said...

மிரட்டுராங்கப்பா
என்னா வீச்சு
எவ்ளோ தைரியம் !!!

தோழி said...

romba nandringa - Cable Sankar, Muralikumar, Nesamithran

ராஜ சேகர் said...

ஏன் உங்களுக்குள் இத்தனை ருத்ரம்? உங்கள் கவிதைகள் அனைத்தும் எங்கோ குறி வைத்து வீசப்படும் சவுக்கடிகளாய்..

லெமூரியன்... said...

\\அளவுக்கு மிஞ்சியக் காதலைக்
காட்டுவதைச் சொல்லி
என் ஆசைக் கூட்டின்
ஒவ்வொரு சிறகையும்
பிய்த்துப் போடுகிறாய்
இதழோரம் நகைக் கூட்டியபடியே
அளவுக்கு மீறினால்
அதுவும் பாவக் கணக்குகளின் எண்ணிக்கையை
அதிகரிக்குமாம்..//

அடர்த்தியான மற்றும் முரட்டுத்தனமான வரிகள்...! குறைந்த பட்ச எதிர்பார்ப்புகளும் கூட எதிர்ப்புகளைத் தாங்கி..... பாவத்தின் குறியீடுகளாய்....

நேர்த்தியான உணர்வுகளின் வெளிப்பாடு....! பட்டாசா இருந்தது போங்க.

தோழி said...

Natpuuuu - Nandrigal. ungalathu kelvigalukku bathil solla niraiya pesa vendi irukkum, sila kobangalai naan semikka virumbugiren. irunthuvittu pogattume yaarukku ithil enna nashtam.

Thanks lemoorian