Thursday, November 5, 2009

துரோகத்தின் நிறம்

துரோகத்தின் நிறம்
இதுவரை புரிபடவில்லை எனக்கு

சமீபத்தில் எனைச் சுற்றி
கருப்பாய் ஒரு மேக மூட்டம்
கவிழத் தொடங்கியது
மேகத் திரை விலக்கி
எட்டிப் பார்த்தேன்

பார்க்கும் இடமெல்லாம்
ரத்த முட்கள்
வேலியாய்

என்றோ சிந்திப் போன
மழைத் துளி ஒன்று
இன்று என் மேல்
அமிலமாய்
என் சதை தின்ற படி

விடியலின் ஆரம்பத்தில்
என் உடல் எங்கும் கவியும்
நீல வெளி


தன் முகம் மறைத்த
துரோகம் கண் விழித்து
என் அருகே
படுத்து உறங்கத் தொடங்கியது
இன்று அதிகாலை

நம்பிக்கை பொய்த்துப் போன
நீள் பயணத்தின் முடிவில்
உயிர் அறுக்கின்றன
சில உறவுகள்

வார்த்தைகள் இரட்டைப் பிரசவ
வலியோடு வெளிவருகின்றன

நம்பிக்கை வெறும்
எழுத்தோடு நின்று விடுகின்றது

மேல் நோக்கி வளரும்
ஒவ்வொரு துளிரும்
மரித்த சிசுவின் வாசம் சுமக்கிறது

3 comments:

Cable சங்கர் said...

konjam kuzhappa irukku.?

அன்பேசிவம் said...

அனு எனக்கும் பிடிபடவில்லை, விளக்க முடியுமா? இங்க இல்லாட்டி மெயிலில்...

ராஜ சேகர் said...

யாரின் மீது கண்டீரோ இந்நிறத்தை?