Friday, December 4, 2009

துளிர்க்கும் இலை





















உதிரும் இலையும் மறுபடி துளிர்க்கும்
வேறொரு பேரில்
வேறொரு வடிவத்தில்

உதிர்ந்ததாய்த்தான் நினைத்திருந்தேன்
உன் அரவணைப்பில்
உள்ளங்கால் சிலிர்க்கும் வரை

என் கண் பார்த்துக் காதல்
சொல்லிவிட்டு
கை கோர்த்துக் காத்திருந்தாய்
விரல்களின் அழுத்தம்
சொல்லித் தந்தது
நமக்கான என் காதலை

ஒரு பேருந்து பயணத்தில்
தோள் சாய்த்து
காதோரமாய் கனவைச்
சொல்லச் சொன்னாய்

சுற்றி நின்ற உலகம் மறந்து
நம் குழந்தைக்கான பேர் சூட்டினோம்

உன் மூச்சுக் காற்று
பட்டு தாண்டி செல்லும் போதெல்லாம்
அடி வயிற்றில் ஆசையாய்
ஒரு அவஸ்தை

இதழ் ஸ்பரிசம்
ஒவ்வொரு இதழாய்
பிரித்து மகரந்தம்
சேமிக்க கற்றுத் தருகிறது
உனக்காக

இன்னும் நிறைய நிறைய
சேமித்து வைத்திருக்கிறேன்
சாவி தொலைத்து

11 comments:

அன்பேசிவம் said...

இன்னும் நிறைய நிறைய
சேமித்து வைத்திருக்கிறேன்
சாவி தொலைத்து

அனு. நல்ல இருக்குங்க... உரையாடல்?

லெமூரியன்... said...

\\உதிரும் இலையும் மறுபடி துளிர்க்கும்
வேறொரு பேரில்
வேறொரு வடிவத்தில்...//

ரசித்து கொண்டிருக்கும் வரிகள்...!
:-) :-)


\\இன்னும் நிறைய நிறைய
சேமித்து வைத்திருக்கிறேன்
சாவி தொலைத்து...//

நல்லா இருக்குங்க...!

பூங்குன்றன்.வே said...

//என் கண் பார்த்துக் காதல்
சொல்லிவிட்டு
கை கோர்த்துக் காத்திருந்தாய்
விரல்களின் அழுத்தம்
சொல்லித் தந்தது
நமக்கான என் காதலை//

ரசனையான வரிகள்.மிக அருமை தோழி.

பா.ராஜாராம் said...

nice.

Mohan R said...

Ethuvum solla mudiyala

THE BEST

உதிர்ந்ததாய்த்தான் நினைத்திருந்தேன்
உன் அரவணைப்பில்
உள்ளங்கால் சிலிர்க்கும் வரை

Nice feel

sathishsangkavi.blogspot.com said...

//இதழ் ஸ்பரிசம்
ஒவ்வொரு இதழாய்
பிரித்து மகரந்தம்
சேமிக்க கற்றுத் தருகிறது
உனக்காக//

எப்படிங்க உங்களாள மட்டும்.........

கலக்ககறீங்க போங்க................

S.A. நவாஸுதீன் said...

//சாவி தொலைத்து//

க்ளாஸ் தோழி. கவிதை ரொம்ப நல்லா இருக்கு.

தோழி said...

நன்றி முரளி, லெமூரியன் ரமேஷ், பூங்குன்றன்

தோழி said...

நன்றி ராஜாராம், இவன், சங்கவி, நவாஸ்

தம்பி... said...

அருமை அருமை !!

Unknown said...

udhirum ovoru ilaiyum, ilaiyudhir kaalam alla,puthampudhu naalin pudhiya vidiyale,saridhanungala Anu?