Friday, May 2, 2008

காத்திருப்பு

காமம் வடிந்த காதலின்
உச்சத்தில் ஒரு மெளனம்
உக்கிரப் புன்னகையோடு
காத்திருக்கிறது...

தனியே நடக்கும் பயணத்தின்
நடுவில் உடன் வரும்
நிழல் எனக்கு முன்பாய்
நீண்டுகொண்டே செல்கிறது..

இசைக்குறிப்புகளின் கோர்வை
முடிந்த நிமிடம்
புயலாய் உன் கேள்வி
தொடர்கிறது...

அலைகளின் சத்தத்தில்
கரைந்துபோன ஒலிக் குறிப்பொன்று
தனை விட்டுப்போன
குழலின் விலாசத்துக்காய்
அலைகிறது காற்றோடு..

மணல் வீட்டின் உச்சியில்
நிலை நிறுத்திய கொடியொன்று
உன் திசையில்
உன் பின்னோடு
மெல்லிய படபடப்போடு
உன் பாதை பார்த்தபடி அமர்ந்திருக்கிறது

எப்போதும் போல் தனியாய்

3 comments:

Ganes Kumar said...

i liked 4th and 5th paragraphs.. they are completely new me. but i don't understand 3rd para.

Jerry Eshananda said...

மணல் வீட்டின் உச்சியில்
நிலை நிறுத்திய கொடியொன்று//
ம்ம்.வார்த்தைகளில்லை.

Jerry Eshananda said...

உங்களை வாழ்த்த.