Saturday, February 9, 2008

தேங்கும் விழிக‌ள்

விடியும் வரை நீளும் இரவை
சுவைக்கும் கனவுகள்
கொட்டிக்கிடக்கும் பனிப்போர்வையின்
ம‌றைவில் ம‌னித‌ முக‌ங்க‌ள்

சொல்லும் சொல்லின் ச‌த்த‌ம்
காற்றோடு க‌ரைந்துவிடுகிற‌து

சொல்லாத‌வை ச‌ற்றுமுன் சுவைத்த‌
ஆழ் முத்த‌த்தின்
முக‌த்து வ‌டுவாய்

வ‌க்கிர‌ம் நிறைந்த‌ க‌ண்ணாய்
கோப‌ம் விடைக்கும் மூக்காய்
உயிர் கிழிக்கும் நாவாய்

எல்லாமாய்
ப‌திந்துவிடுகிறது

சுற்றிப்பார்க்க‌ வ‌ரும் கூட்ட‌ம்

ஒரு சார‌லில் கிள‌ம்பும் வாச‌னையாய்
மெல்ல‌ப் ப‌ர‌வுகிற‌து அறையினுள்

பெரும‌ழை விட்டுச்சென்ற‌
சாலையோர‌ த‌ண்ணீர் தேங்க‌லாய்

போகும் வாக‌ன‌ங்க‌ளின் க‌றுப்பு ஜ‌ன்ன‌ல்க‌ள் அறியுமோ
தேங்கும் நீரில் வாழும் விழிக‌ளை

2 comments:

விஜயன் said...

I hope u read ramakrishnan writings.good.u didn't give comments sections in ur vaalgai payanagal.

விஜயன் said...

good