Friday, August 28, 2009

சுய சரிதை

ஒற்றைத் தனிமையின் வெளியில்
தனியாய் திரிந்துகொண்டிருந்தது
பச்சை நிற சர்ப்பம் ஒன்று.

உரித்துப் போன சட்டை ஒன்று
மரப்புல்லில் சல்லாபித்துகொண்டிருக்கிறது

கூடல் முடிந்த பின்
கழற்றிபோட்ட ஆணுறை
போய்வந்த பயணம் பற்றி
சுய சரிதை எழுததொடங்கியுள்ளது

ஆணுறை தப்பிய சுயமைதுன
விந்தொன்று படுக்கையின் மத்தியில்
வீறுகொண்டு எழுந்து வீரியம் காட்டிய படி
பேயாட்டம் ஆடுகிறது

நிசப்தம் நிறைந்த மனதின் வெளியில்
ஒற்றைக்கண் மூடி
தியானம் தொடங்கியாகிவிட்டது

பெண்டாளும் உன் கோர முகம்
அருகில் கண்ட
இரவில்

எதிர் சுவற்று பல்லியோடு
என் கூடல் மிக திருப்தியோடு
உச்ச நிலை நோக்கி

No comments: